3 மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - நரக வேதனையில் சிறுமி செய்த சம்பவம்!
3 மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை 14 வயது சிறுமி சுட்டுக் கொன்றுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம், லாகூர் நகரில் உள்ள குஜ்ஜார்புரா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி மீது "துப்பாக்கியால் அவருடைய தந்தையை சுட்டுக் கொன்றுள்ளார் என கொலை குற்றச்சாட்டு பதிவானது.
இதுகுறித்து போலீசார் அதிகாரி சொஹைல் கஸ்மி விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது " கடந்த 3 மாதங்களாக சிறுமியை, அவரின் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி 3 மாதங்கள் நன்றாக வேதனை அனுபவித்துள்ளார். இதன் காரணமாக தந்தையை கொலை செய்ய சிறுமி முடிவு செய்துள்ளார்.
தந்தை கொலை
பிறகு துப்பாக்கியை கொண்டு சுட்டுள்ளார்" என்று சொஹைல் கஸ்மி கூறியுள்ளார். மேலும் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக லாகூர் நீதிமன்றத்தில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட மறுநாள் இந்த சம்பவம் பற்றி தெரியவந்துள்ளது. கூடுதல் செசன்ஸ் நீதிபதி மியான் சாஹித் ஜாவித், குற்றவாளியான ரபீக்குக்கு கடந்த வெள்ளிக் கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.