வேளாண் சட்டங்கள் ரத்தாகாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களுடன் முற்றுகையிடுவோம்: எச்சரிக்கை கொடுக்கும் விவசாயிகள் சங்கம்
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த பதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச எல்லைகளில் 3 மாதங்களாக விவசாயிகள், போராடி வருகின்றனர்.
இதில் மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. குடியரசு தினத்தன்று நடத்தப்பட்ட டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக 40 லட்சம் ட்ராக்டர்களுடன் நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் சிக்கர் பகுதியில் யுனைட்டட் கிசான் மோர்சா சங்கம் நடத்திய கூட்டத்தில் ராகேஷ் திகைத் பேசினார்அப்போது, வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் மீண்டும் டெல்லியை நோக்கி பயணிப்போம் என்றார். அதாவது முன்பு நான்கு லட்சம் ட்ராக்டர்கள்தான் இருந்தன. இந்த முறை 40 லட்சம் ட்ராக்டர்களில் செல்வோம்.
விவசாயத்திற்கு பயன்படுத்தும் கருவிகளுடன் போராட்டத்தில் பங்கேற்போம்என்று தெரிவித்த அவர் டெல்லி இந்தியா கேட், நாடாளுமன்றம் கட்டிடம் அருகே உள்ள பூங்காக்களில் உழுது பயிர் விதைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Our next call will be for a march to Parliament, and not just 4 lakh tractors but 40 lakh tractors will go there if farm laws are not taken back: BKU leader Rakesh Tikat at a farmers rally in Sikar, Rajasthan yesterday pic.twitter.com/OCQE9GxsQr
— ANI (@ANI) February 24, 2021