விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி: முக ஸ்டாலின் டுவிட்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்கிறேன்.
இது இந்தியா முழுவதும் போராடிய விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி! அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
I welcome the decision of the Supreme Court to stay the #FarmLaws in the cases filed by various parties including DMK.
— M.K.Stalin (@mkstalin) January 12, 2021
This is a victory for farmers protesting across India.
I once again urge the Union Govt to commit to repealing the farm laws in the next Parliament Session.