விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கவுள்ள உத்தவ் தாக்கரே
மும்பையில் 25-ந் தேதி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சரத்பவார் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மும்பையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பங்கேற்க இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மாநில மந்திரியுமான நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டம் வரும் 25-ந்தேதி ஆசாத் மைதானில் நடைபெறும் எனவும், இந்த போராட்டத்தில் கட்சி தலைவர் சரத்பவார் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.