நடிகையை இழுத்துக் கொண்டு தனுஷ் ஓட்டம்...காரில் ஏற்றிக் கொண்டு பறந்தார்..!
நடிகர் தனுஷ், நடிகை ராஷி கண்ணா ஆகியோரது நடிப்பில் இயக்குநர் மித்ரன், ஆர்.ஜவஹர் இயக்கத்தில் உருவான திரைப்படம் திருச்சிற்றம்பலம்.
நடிகையை சுற்றி வளைத்த ரசிகர்கள்
இந்த படம் தமிழகம் முழுவதும் இன்று காலை வெளியானது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் இன்று வெளியானதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை திரைப்படம் வெளியானதை அடுத்து படத்தை பார்பதற்கு நடிகர் தனுஷ் மற்றும் அவரது மகன்களான யாத்ரா, லிங்கா, நடிகை ராஷி கண்ணா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் ரோகினி திரையரங்கம் வந்திருந்தனர்.
திரைப்படம் முடிந்த பின் நடிகை ராஷி கண்ணாவை காண ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். இதனால் திரையரங்கை விட்டு வெளியேற முடியாத சூழல் நடிகை ராஷி கண்ணாவிற்கு ஏற்பட்டது.
இதையடுத்து நடிகர் தனுஷ் தனது மகன்களை மற்றொரு காரில் வரச் சொல்லிவிட்டு நடிகை ராஷி கண்ணாவின் கையை பிடித்துக் கொண்டு காரில் ஏற்றினார் பின்னர் அவர் மற்றும் அனிருத் அந்த காரில் புறப்பட்டுச் சென்றனர்.
முழு வீடியோ கீழே;