ஹர்திக் பாண்டியா மீது செருப்பை வீசிய ரசிகர்கள்; live -இல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா தொலைக்காட்சியில் பேசும்போது ரசிகர்கள் செருப்பை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்திக் பாண்டியா
நடப்பாண்டின் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றனர். இதுவரை நடைபெற்ற போட்டிகளில், விளையாடிய சென்னை அணி இரண்டு போட்டியில் வெற்றி பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இதேபோல் இரண்டு போட்டிகளில் விளையாடிய மும்பை அணி இரண்டிலும் தோல்வியை தழுவி 9-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்ற மும்பை அணி கடந்த சில ஆண்டுகளாகவே தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால், மும்பை அணி நிர்வாகம் அந்த அணி கேப்டனாக இருந்த ரோகித் ஷர்மாவிற்கு பதிலாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்த்திக் பாண்டியாவை மாற்றியது.
செருப்பை வீசிய ரசிகர்கள்
இதனால் ரோகித் ஷர்மா ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அதேபோல, தன் சொந்த மாநிலமான குஜராத் அணிக்கு விளையாடாமல், மும்பை அணிக்கு சென்ற ஹர்திக் பாண்டியா மீதும் ரசிகர்களும் கோபமடைந்தனர்.
இதையடுத்து முதல் போட்டியில் குஜராத் அணியுடன் மோதிய போது, முன்னாள் கேப்டன் என பார்க்காமல் ரோகித் ஷர்மாவை பீல்டிங் செய்ய அலைக்கழித்த ஹர்திக் மீது கடும் விமர்சனம் எழுந்தது.
இதற்கிடையில், தங்களது இரண்டாவது போட்டியில், ஹைதராபாத் அணி உடனான போட்டியிலும் மும்பை அணி தோல்வியை தழுவியது.
இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற ரசிகர்கள், ஹர்திக் பாண்டியா பேட்டியளிக்கும் திரையின் மீது, செருப்பை வீசி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.