எல்லை மீறி போகும் ராஷ்மிகா - கேஸ் போட போறேன்!! மிரட்டும் நபர் - அதிர்ச்சி பின்னணி?
அல்லு அர்ஜூனுடன் புஷ்பா 2 படத்தின் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார் நடிகை ராஷ்மிகா.
புஷ்பா
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் என பலர் நடித்து 2021-ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படம் தமிழகத்தில் பெரிய வரவேற்பை பெறவில்லை.
ஆனால், படம் தெலுங்கு ஹிந்தி மொழி ரசிகர்களிடம் மெகா ஹிட் படமாக மாறியது. ரசிகர்கள் கொண்டாடினார்கள். படத்தின் 2-ஆம் பாக ஷூட்டிங்கும் அப்போதே துவங்கியது. படத்தில் இடம்பெற்றிருந்த ஊ அண்டாவா பாடல் சமந்தாவால் பெரிய வரவேற்பை பெற்றது.
ஆகையால் 2-ஆம் பாகத்திற்கு தமிழ்நாட்டிலும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. நீண்ட காலமாக நடைபெற்று வரும் ஷூட்டிங் முடிவடையும் வண்ணத்தில், படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 15 என அறிவிக்கப்பட்டது.
மிரட்டும் ரசிகர்கள்
இரண்டு பாடலும் வெளியானது. ஆனால், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு டிசம்பர் 6-ஆம் தேதிக்கு படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்திற்கு உண்டாகி இருக்கிறார்கள்.
இது குறித்து தான் கமெண்ட் செய்துள்ள நெட்டிசன் ஒருவர், படம் ஜூன் 2024 இல் வெளியாகிறது. இது ஏன் டிசம்பர் 2024 க்கு மாற்றப்பட்டது. இது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நகைச்சுவையா? பார்வையாளர்களின் உணர்வுகளுடன் விளையாடுவது.
The movie was releasing in June 2024. Why this has been shifted to Dec 2024.
— GlobalGlimpses✨ (@krunchi_hu) June 17, 2024
Is this a joke to the filmmakers. Playing with the emotions of audience.
On behalf of Puspha Community i will file a case in Court to release it ASAP
புஸ்பா சமூகம் சார்பில், விரைவில் அதை விடுவிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வேன் என கமெண்ட் செய்துள்ளார்.