இந்தியா- இங்கிலாந்து இடையேயான எஞ்சிய போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு

india cricket england match fan
By Jon Mar 16, 2021 12:02 PM GMT
Report

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டியானது, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது.

இதனால், இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் அடுத்த 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், 16-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு நடக்கிறது.

இதனிடையே, கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் எஞ்சிய போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு முழுக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.