போலி என்கவுண்டர் என்ற பெயரில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை - கடிதத்தால் பரபரப்பு!
போலி என்கவுன்டர் என்று பெயரில் கொலை செய்யப்படலாம் என்று ரவுடி எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுக்கொலை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிளாய் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி விஷ்வா (38). இவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார், இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை முயற்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இவர் சுங்குவார் சத்திரம் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. அப்பொழுது அந்த ரவுடி போலீசாரை தாக்கி தப்பியோட முயற்சித்துள்ளார், அதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர், அதில் ரவுடி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கடிதம்
இந்நிலையில், ரவுடி விஷ்வா தன்னை காவல்துறை என்கவுண்டர் செய்யப் போவதாக உயர் அதிகாரிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் மனு அளித்திருந்தார். அதில் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீபெரும்பத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் எஸ்.ஐ. தயாளன் உள்ளிட்ட காவல்துறையினரே பொறுப்பு என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டதாக விஷ்வாவின் குடும்பத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.அவர் அளித்த அந்த கடிதம் தற்பொழுது பரவி வருகிறது.