நெல்லை சீமையில் பிறந்து இந்தியாவையே கலக்கிய முக்கிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

Tirunelveli
By Sumathi Sep 13, 2023 10:45 AM GMT
Report

திருநெல்வேலி சீமையில் அல்வா ஃபேமஸ், தாமிரபரணி ஆறு ஃபேமஸ்னு நாம் அனைவருக்கும் தெரியும். அதன் வரலாறும் கூட கேள்விப்பட்டிருப்போம். ஆனால் திருநெல்வேலியில் பிறந்து தமிழகத்தில் கலக்கிய பிரபலங்கள், முக்கிய மனிதர்கள் குறித்து தெரியுமா. அதைப் பற்றி இத்தொகுப்பில் பார்ப்போம்.

புலி தேவர்

நெல்லை சீமையில் பிறந்து இந்தியாவையே கலக்கிய முக்கிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா? | Famous Personalities From Tirunelveli

புலி தேவர் ஒரு தமிழ் பாளையக்காரர். தென்காசி , சங்கரன்கோவில் தாலுகாவில் அமைந்திருந்த நெற்கட்டும்செவலை ஆண்டார். இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக மே 22, 1752 - 1767 வரை போரிட்டதில் குறிப்பிடத்தக்கவர்.

ஒண்டி வீரன்

நெல்லை சீமையில் பிறந்து இந்தியாவையே கலக்கிய முக்கிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா? | Famous Personalities From Tirunelveli

சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள நெற்கட்டான் செவல் கிராமத்தில் பிறந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன். 1755-ம் ஆண்டு நெல்லை சீமையில் பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற போரில், ஆக்ரோஷமாக போரிட்டு, பல வெற்றிகளை குவித்தார்.

வண்ணதாசன்

நெல்லை சீமையில் பிறந்து இந்தியாவையே கலக்கிய முக்கிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா? | Famous Personalities From Tirunelveli

கல்யாண்ஜி என்ற வண்ணதாசன் தமிழ் எழுத்தாளர். திருநெல்வேலியில் 1946ல் பிறந்தார். வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகள் மற்றும் புனைகதை அல்லாத கட்டுரைகள் மற்றும் கல்யாண்ஜியின் கீழ் கவிதைகள் எழுதுகிறார். சிறு இசை என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 2016 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதை வென்றார். 2016 இல் வென்ற விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும் பெற்றவர். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.செல்வராஜ்

நெல்லை சீமையில் பிறந்து இந்தியாவையே கலக்கிய முக்கிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா? | Famous Personalities From Tirunelveli

டி.செல்வராஜ் நாவல்கள், சிறுகதைகள் மற்றும் நாடகங்களை எழுதியவர். தென்கலத்தில் பிறந்தார். அவரது முதல் குறிப்பிடத்தக்க படைப்பு மலரும் சருகும் நாவல் தான். விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் எழுதப்பட்டது. தமிழில் எழுதப்பட்ட முதல் தலித் நாவலாக இது கருதப்படுகிறது. சாமிசிதம்பரனார் - தமிழ் எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு என்ற நூலுக்காக 2006ல் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.

வைகோ

நெல்லை சீமையில் பிறந்து இந்தியாவையே கலக்கிய முக்கிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா? | Famous Personalities From Tirunelveli

வைகோ சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் பிறந்தார். பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை கலைப் பட்டத்தில் தங்கப் பதக்கம் மற்றும் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். தற்போது, மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக உள்ளார்.

 அப்பாவு 

நெல்லை சீமையில் பிறந்து இந்தியாவையே கலக்கிய முக்கிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா? | Famous Personalities From Tirunelveli

முத்துவேலாயுத பெருமாள் அப்பாவு தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர். தற்போதைய தமிழக சட்டப் பேரவையின் சபாநாயகராக உள்ளார் . ராதாபுரம் மாநில சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார்.

மாரி செல்வராஜ்

நெல்லை சீமையில் பிறந்து இந்தியாவையே கலக்கிய முக்கிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா? | Famous Personalities From Tirunelveli

மாரி செல்வராஜ் 1984ல் நெல்லையில் பிறந்தார். 2006 இல் தமிழ் திரையுலகில் நுழைந்தார். ராமிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். பரியேறும் பெருமாள் (2018) மூலம் அவர் இயக்குநராக அறிமுகமானார். இது மிகவும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றது. தொடர்ந்து கர்ணன், மாமன்னன் படங்களாஇ இயக்கியுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா

நெல்லை சீமையில் பிறந்து இந்தியாவையே கலக்கிய முக்கிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா? | Famous Personalities From Tirunelveli

எஸ்.ஜே.சூர்யா சங்கரன்கோவிலுக்கு அருகில் உள்ள வாசுதேவநல்லூரில் பிறந்தார். தற்போது திரைக்கதை எழுத்தாளர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளராக பன்முகத்தன்மையோடு வலம் வருகிறார்.

ஷிவ் நாடார்

நெல்லை சீமையில் பிறந்து இந்தியாவையே கலக்கிய முக்கிய பிரபலங்கள் யார் யார் தெரியுமா? | Famous Personalities From Tirunelveli

ஷிவ் நாடார் தூத்துக்குடி, மூலைபொழி கிராமத்தில் பிறந்தார். புனேவில் உள்ள வால்சந்த் குழுமத்தின் கூப்பர் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது, HCL டெக்னாலஜிஸ் மற்றும் ஷிவ் நாடார் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ளார். 2008ல் பத்மபூஷன் விருதை வென்றார். 2021ல் 31 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் இந்தியாவின் மூன்றாவது பணக்காரராக தரவரிசைப்படுத்தப்பட்டார்.