ஆசையாய் சாப்பிட்ட காளான்; ஒரே குடும்பத்தில் 3 பேர் பரிதாப பலி - பகீர்!
காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
காளான்
ஆஸ்திரேலியா, விக்டோரியா மாகாணத்தில் லியோங்கதா என்ற பகுதியில் ரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் வீட்டில் மதிய உணவாக காளான் சாப்பிட்டுள்ளனர். உடனே அவர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மற்றொரு நபரின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தகவலறிந்து விரைந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அதே வீட்டில் இருக்கும் மற்றொரு பெண் நான்கு பேருக்கும் உணவு சமைத்து பரிமாறியிருக்கிறார்.
3 பேர் பலி
ஆனால் அவர் சாப்பிடவில்லை. இதுகுறித்து பேசிய அந்தப் பெண், நான்கு பேரும் தனக்கு மிகவும் பிரியமானவர்கள். அவர்களுக்கு எதிராக தான் ஒன்றும் செய்யவில்லை எனக் கூறியுள்ளார். எந்த வகையான காளான் சமைத்து பரிமாற்றப்பட்டது என்பது தெரியாவிட்டாலும்,
அது விஷக் காளான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல் அதிகாரி தாமஸ் கூறியுள்ளார். 70 வயதான கெய்ல் மற்றும் டான் பேட்டர்சன் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயரிழந்துள்ளனர்.
கெயில் என்பவரின் உறவினரான 66 வயதான ஹீதர் வில்கின்ஸன் வீட்டிலேயே உயிரிழந்திருக்கிறார். வில்கின்ஸனின் கணவர் 68 வயதான லேன் வில்கின்ஸன் மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவர்களின் பிள்ளைகளும் சம்பவத்தின் போது வீட்டில் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த உணவை உண்ணவில்லை. இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் தெரியாததால் உயிரிழந்தவர்கள் உண்ட உணவை கைப்பற்றி தடயவியல் நிபுணர்கள் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.