பெண்களை நடுத்தெருவில் இழுத்து சரமாரியாக அடித்து உதைக்கும் ஆண்கள் - வேடிக்கை பார்த்த மக்கள்!
ஆண்கள் சிலர் நடுரோட்டில் வைத்து பெண்களை அடிக்கும் வீடியோ பரவி வருகிறது.
சொத்து பிரச்சனை
உத்தரபிரதேச மாநிலம், மஹ்லோலி என்ற கிராமத்தில் சொத்து தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் பெண்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அதில் ஆண்கள் சிலர் பெண்கள் இருவரை இழுத்து நடுரோட்டில் போட்டு சரமாரியாக அடித்து உதைக்கின்றனர்.
இதனை அப்பகுதி மக்கள் யாரும் தடுக்காமல் நின்று வேடிக்கை பார்க்கின்றனர். கொடூரமாக தாக்கும் இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், தாக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமீப காலமாகவே பெண்களுக்கு எதிராக பல அத்துமீறல்களை தாக்குதல்களும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்பொழுது இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.