அடிக்கடி மசாஜ் சென்டருக்கு.. போலி புல்லட் போலீஸ் செய்த காரியம் - ஆடிப்போன அதிகாரிகள்!

Tamil nadu Chennai Tamil Nadu Police
By Vinothini Nov 09, 2023 05:53 AM GMT
Report

புல்லட் போலீஸ் மசாஜ் சென்டரில் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மசாஜ் சென்டர்

சென்னையில், வடபழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் வந்து மிரட்டி பணம் பறிப்பதாக வடபழனி உதவி ஆணையருக்கு தகவல் கிடைத்தது. இதனால் வடபழனி உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை அமைத்து தீவிரமாக தேடினர்.

fake sub inspector

அப்பொழுது அதே பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் உதவி ஆய்வாளர் உடையில் இன்று ஒருவர் வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

பேராசிரியருடன் தகாத உறவு.. மணாலி ட்ரிப்பில் மாசமாக்கிய மாணவர் - கதறும் ஆசிரியர்!

பேராசிரியருடன் தகாத உறவு.. மணாலி ட்ரிப்பில் மாசமாக்கிய மாணவர் - கதறும் ஆசிரியர்!

போலீஸ் விசாரணை

இந்நிலையில், விசாரணனியில் அவர் ராமாபுரம் வெங்கடேஸ்வர நகர் பகுதியை சேர்ந்த 30 வயதான அஸ்வின் என்பதும் இவர் நான்கு ஆண்டு முன்பு டிராபிக் வார்டனாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

fake sub inspector

அதன்பிறகு அவர் வேறு எந்த வேலைக்கும் செல்லவில்லை, மாமூல் வாங்கி பழகிய இவர் காவல் உதவி ஆய்வாளர் உடையை வாடகைக்கு எடுத்து தனது புல்லட்டில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டி கொண்டு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் கடந்த சில நாட்களாக பணம் பறித்து வந்தது தெரிய வந்தது.

பிறகு போலீசார் அவரிடம் இருந்து காவல் உதவி ஆய்வாளர் உடை மற்றும் இருசக்கர வாகனம், போலி அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.