சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்ற அரிசி மாவுடன் இதை கலந்து பேக் போடுங்கள்

woman natural skin
By Jon Feb 03, 2021 03:27 PM GMT
Report

முகத்தில் இறந்த செல்கள் தங்கிவிடுவதால் முகப்பருக்கள் வருகிறது, அவ்வப்போது அதை வெளியேற்ற வேண்டும். இதற்கு மிகவும் சிம்பிளான வீட்டிலேயே செய்யக்கூடிய டிப்ஸை பற்றி தெரிந்து கொள்வோம். அரிசி கழுவிய நீர் அல்லது அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஐஸ்க்யூப்களில் ஊற்றி வைக்கவும்.

அவை ஐஸ்கட்டிகளாக உறைந்ததும் அதை கொண்டு சருமத்தில் முகம் முழுக்க எங்கெல்லாம் அரிப்பு பிரச்சனை உள்ளதோ அங்கெல்லாம் ஒத்தடம் கொடுக்கவும். தினமும் 15 நிமிடங்கள் வரை இப்படி செய்து வந்தால் சரும அழற்சி நீங்கும்.

அரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து உருட்டி முகத்தில் இலேசாக மசாஜ் செய்யவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மூக்கு நுனிகள் கழுத்தில் இருக்கும் கருமைகள் போன்ற இடங்களில் சற்று அழுத்தமாக ஸ்கரப் செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். பிறகு ஐஸ்கட்டிகள் கொண்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுக்கவேண்டும்.

முதல்முறை செய்யும் போதே முகத்தில் பளிச் பார்க்கலாம். தேவையான பொருட்கள் அரிசி மாவு - 3 டீஸ்பூன் காய்ச்சாத பால் அல்லது பன்னீர் - 3 டீஸ்பூன் தயிர் - 3 டீஸ்பூன். செய்முறை அனைத்தையும் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் பேக் போடவும். முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி இலேசாக மசாஜ் செய்து விடவும்.

அப்படியே உலரவிடவும். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். முகத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றும். அழுக்குகளை அகற்றும். முகத்தின் மங்கிய நிறத்தை மாற்றும். வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் முகத்தின் நிறம் அதிசயத்தக்க அளவில் பளிச்சென்று இருக்கும்.

சருமத்தில் கொப்புளங்கள், உஷ்ணக்கட்டிகள், கோடையில் வியர்க்குரு, சிவப்பு, அரிப்பு தடிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும்.