முகத்திற்கு எதை பயன்படுத்துவது? சோப்பா அல்லது பேஸ் வாஷா

beauty health face
By Jon Jan 13, 2021 02:36 PM GMT
Report

உங்கள் சருமத்தை நன்றாக பராமரிக்க, தொடர் கவனம் இருக்கவேண்டும். மாசு , சுற்றுச்சூழல் கேடு அல்லது சூரிய ஒளியால் சருமம் எளிதாக பாதிக்கப்படலாம். வெளியில் செல்லும் போது கட்டாயம் சன்ஸ்கீரனை பயன்படுத்தவும். நம் சருமத்திற்கு சோப்பு நல்லதா ? கெட்டதா ? என்பதில் நம் அனைவருக்குமே சந்தேகம் உள்ளது.

முகத்திற்கு சோப்பு பயன்படுத்துவதை முதலில் நிறுத்திவிடுங்கள். உடலின் மற்ற பகுதிகளில் உள்ள சருமத்துடன் ஒப்பிடும் போது, நம் முகத்தில் உள்ள சருமம் மிகவும் மென்மையானது. சருமத்தின் தடிமன் மாறுபடக்கூடியது. முகத்தில் உள்ள சருமம் மென்மையானது என்பதால் அதற்கேற்ற முறையில் பராமரிக்க வேண்டும்.

குறிப்பாக கண்களைச்சுற்றியுள்ள சருமம் மிகவும் மென்மைனாவை. எனவே உங்கள் சருமத்தின் மீது மென்மையாக இருக்கும் பொருட்களையே பயன்படுத்த வேண்டும். முகத்தில் உள்ள சருமத்தில் நிறைய நுண் துளைகள் உள்ளன. இவற்றை சரியாக கவனிக்காவிட்டால், பரு, கோடுகள் போன்ற பாதிப்புக்கு சருமம் உள்ளாகும்.

உங்கள் முகத்தில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய், சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து நம்மை காக்கிறது. இதற்கு மாறாக, சோப்பு பயன்படுத்தும்போது, அழுக்குடன் சருமத்தின் இயற்கையான எண்ணெயும் வெளியேற்றப்படுகிறது. சோப்பு கட்டி, சருமத்தின் இயல்பான பிஎச் அளவு சமநிலையை பாதித்து, அதை உலர வைக்கிறது.

உங்கள் சருமம் இயல்பாக அமிலத்தன்மை கொண்டது. சோப்பின் ஆல்கலைன் தன்மை, சருமத்தை உலர வைத்து, மென்மையான முக சருமத்தின் ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. சோப்பு பயன்பாடு எரிச்சல் போன்ற பாதிப்பையும் உண்டாக்கி, சருமத்தை மேலும் பாதிக்கும். எனவே முகத்திற்கு சோப்பை பயன்படுத்தக்கூடாது.

பேஸ் வாஷ் பலன் தருமா? பேஸ் வாஷ் நல்ல பலன் தரும். நல்ல பேஷ்வாஷ், சருமத்தின் பிஎச் அளவை தக்க வைப்பதோடு, அழுக்கையும் வெளியேற்றுகிறது. மேலும் பேஸ் வாஷ் சருமத்தில் சுரக்கும் இயற்கையான எண்ணெயை முகத்தில் இருந்து அகற்றுவதில்லை. உங்கள் சருமத்திற்கு ஏற்ற நல்ல பேஸ் வாஷை தேர்வு செய்யவும்.

உங்கள் சருமம் எண்ணெய் பசை மிக்கது என்றால், எண்ணெய் பசை இல்லாத பேஸ் வாஷை தேர்வு செய்யலாம். அது கூடுதலான எண்ணெய் பசையை நீக்கி, சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. உங்கள் சருமம் உலர் சருமம் என்றால், சல்பேட் இல்லாத பேஸ் வாஷை தேர்வு செய்யலாம்.

இது சருமம் உலர்வதை தடுத்து, ஈரப்பத தன்மையையும் எப்போதும் அளிக்கிறது.