ரூ.1000 மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மாற்றம்? - முக்கிய தகவல்!

M K Stalin Tamil nadu DMK
By Vinothini Nov 01, 2023 07:33 AM GMT
Report

உரிமை தொகை திட்டத்தில் மாற்றம் ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் உரிமை தொகை

தமிழ்நாட்டில் தற்பொழுது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு 2 தவணைக்கான பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்து வருகின்றனர்.

expecting-changes-in-rs1000-women-scheme

இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேல்முறையீடு செய்தும் வறுமையான குடும்பத்தை சார்ந்த பலருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படவில்லை.

அமைச்சரவை கூட்டம்

இந்நிலையில், முதல்வர் அறிவித்தும்கூட அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மற்ற கட்சியினர் அணைத்து குடும்ப தலைவிகளுக்கும் இந்த மகளிர் உரிமை தொகை கிடைக்கவேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இனி யாரும் தப்பிக்கமுடியாது.. ஆப் மூலம் ஆப்பு - ரோட்டுல இப்படி மட்டும் போனால் ரூ.10,000 அபராதம்!

இனி யாரும் தப்பிக்கமுடியாது.. ஆப் மூலம் ஆப்பு - ரோட்டுல இப்படி மட்டும் போனால் ரூ.10,000 அபராதம்!

தற்பொழுது தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் மகளிர் உரிமை தொகை தொடர்பாக விவாதம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may like this video.....