பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரம் உதவி- பீகார் அரசு அறிவிப்பு
பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரமும், பட்டப்படிப்பு முடிக்கும் பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று பீகார் அரசு அறிவித்துள்ளது. நேற்று சட்டப்பேரவையில் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான தார் கிஷோர் பிரசாத் தாக்கல் செய்தார்.
அப்போது, திருமணமாகாத பெண்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றால் ரூ.25 ஆயிரமும், இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றால் ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன.
கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்புக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் சோலார் மின் விளக்குகள் பொருத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.