தமிழக முன்னாள் அமைச்சர் புலவர் இந்திரகுமாரி காலமானார்!

M K Stalin ADMK Death
By Swetha Apr 16, 2024 04:39 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக இலக்கிய அணி தலைவருமான புலவர் இந்திரகுமாரி உயிரிழந்தார்.

தமிழக முன்னாள் அமைச்சர் 

இந்திராகுமாரி (73) மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில்1991-96 காலகட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இவருக்கு வழக்கறிஞர் பாபு என்ற கணவரும், லேகா சந்திரசேகர் என்ற மகளும் உள்ளனர்.

தமிழக முன்னாள் அமைச்சர் புலவர் இந்திரகுமாரி காலமானார்! | Ex Minister Passed Away Cm Mk Stalin Obituary

அதிமுகவில் இருந்த இந்திராகுமாரி அதன் பிறகு, கடந்த 2006 ஆம் ஆண்டில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.திமுகவில் இவருக்கு இலக்கிய அணி மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சிறுநீரக பாதிப்பு காரணமாக மருதத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதையடுத்து, இந்திராகுமாரியின் உடல் அஞ்சலிக்காக அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட உள்ளது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானா‌ர்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானா‌ர்

இந்திரகுமாரி காலமானார்

திமுக நிர்வாகிகள் பலரும் வந்து அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து, அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “திமுக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது.

தமிழக முன்னாள் அமைச்சர் புலவர் இந்திரகுமாரி காலமானார்! | Ex Minister Passed Away Cm Mk Stalin Obituary

நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர். தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு திமுகவிற்கும், இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும்.

புலவர் இந்திரகுமாரியை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.