பாதயாத்திரை என்ற பெயரில் பஸ் யாத்திரை.. முடிந்ததும் அண்ணாமலை கைது உறுதி - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆவேசம்!

Indian National Congress E. V. K. S. Elangovan Tamil nadu BJP K. Annamalai
By Vinothini Aug 16, 2023 04:57 AM GMT
Report

 காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசியுள்ளார்.

சுதந்திர தினம்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று சுதந்திர தின விழாவையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசியக் கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

evks-elangovan-says-bjp-annamalai-will-be-arrested

இதில் கலந்துகொண்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசும் போது, "தமிழகத்தில் பாத யாத்திரை என்ற பெயரில் பாஜக தலைவர் அண்ணாமலை பஸ் யாத்திரை நடத்தி கொண்டிருக்கிறார். நடைபயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல் காந்தி போல் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட முடியாது" என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர் பேச்சு

இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், " ஊர்க்குருவி உயரே உயரே பறந்தாலும் பருந்தாகிவிட முடியாது. அண்ணாமலையின் கனவு, புலியை நினைத்து பூனை கோடு போட்டுக் கொண்ட கதையாகத் தான் இருக்கும். அண்ணாமலை பாத யாத்திரையை நிறைவு செய்யும் போது அவர் பதவியில் இருக்க மாட்டார்.

evks-elangovan-says-bjp-annamalai-will-be-arrested

பதவியில் இருக்கிறாரோ இல்லையோ கர்நாடக மாநிலத்தில் அவர் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றிய போது செய்த ஊழல்களுக்காக கைது செய்யப்படுவது உறுதி" என்று கூறியுள்ளார்.

மேலும், கர்நாடக மாநிலத்தில் அண்ணாமலை அதிகாரியாக இருந்தபோது நடைபெற்ற ஊழலுக்காக அவர் கைது செய்யப்படுவார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.