மைதானத்திற்குள் காலடி எடுத்து வைத்த தோனி - அதிர்ந்த சேப்பாக்கம்
கடைசி 4 பந்துகள் மீதம் இருக்கையில் மைதானத்திற்குள் என்ட்ரீ கொடுத்த தோனிக்கு ரசிகர்களில் கொடுத்த வரவேற்பால் சேப்பாக்கம் அதிர்ந்தது.
அதிரடி காட்டிய கான்வே
ஐபிஎல் தொடரின் 41வது போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது.
முதலில் டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ருத்துராஜ் கெய்க்குவாட் 37 ரன்களிலும், சிவம் துபே 28 ரன்களிலும், மொயின் அலி 10, ரவிந்தீர ஜடேஜா 12 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அதிரடியாக விளையாடிய டெவோன் கான்வே52 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தோனி என்டரீ - அதிர்ந்த மைதானம்
கடைசி 4 பந்துகள் மீதம் இருக்க மைதானத்திற்குள் தல தோனி வருகையில் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். கூடியிருந்த ரசிகர்களின் ஆரவாரத்தால் சென்னை சேப்பாக்கம் மைதானமே அதிர்ந்தது.
இதையடுத்து கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸ்ர்களை விளாசினார். இதனால் சென்னை ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் சிக்கந்தர் ராஜா , அர்ஷ்தீப் சிங், ராகுல் சஹர், சாம் கரண் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி 4 ஓவர்கள் முடிவில் 49 ரன்கள் எடுத்துள்ளது.