அதிரடி காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் அணிக்கு 201 ரன்கள் இலக்கு
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடி காட்டிய கான்வே
ஐபிஎல் தொடரின் 41வது போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
முதலில் டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ருத்துராஜ் கெய்க்குவாட் 37 ரன்களிலும், சிவம் துபே 28 ரன்களிலும், மொயின் அலி 10, ரவிந்தீர ஜடேஜா 12 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அதிரடியாக விளையாடிய டெவோன் கான்வே 52 பந்துகளில் 92* ரன்கள் எடுத்து களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
201 ரன்கள் இலக்கு
பஞ்சாப் கிங்ஸ் அணியில் சிக்கந்தர் ராஜா , அர்ஷ்தீப் சிங், ராகுல் சஹர், சாம் கரண் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்க உள்ளது பஞ்சாப் அணி.