சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் தோற்றுப் போன இந்தியா
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. அதுவும் இந்திய கேப்டன் கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
கடைசியாக 2016 - 17 சீசனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பூனே டெஸ்டில் இந்தியா 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல கோலியின் தலைமையின் கீழ் இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிராக 2 டெஸ்ட், ஆஸ்திரேலியா (1 டெஸ்ட்) மற்றும் இங்கிலாந்து (1 டெஸ்ட்) என நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
22 ஆண்டுகள் கழித்து சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வி இந்தியா 1999 ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வி கண்டது. அதன் பிறகு இந்த டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்டுள்ளது. இங்கிலாந்து அணி ஆசிய கண்டத்தில் பதிவு செய்திருக்கும் ஆறாவது தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
ENGLAND WIN ?
— ICC (@ICC) February 9, 2021
An all-round performance by the visitors has given them a 227-run victory over India.
The lead the four-test series 1-0!#INDvENG ➡️ https://t.co/gnj5x4GOos pic.twitter.com/luS7HAcWIm