இந்தியாவை இங்கிலாந்து புரட்டி எடுக்கும்.. பைனல் போகாது - அக்தர் கருத்து!
அரை இறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி பைனலுக்கு செல்லும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் தெரிவித்துள்ளார்.
IND vs ENG
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது அரையிறுதிப் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை 20 ஓவர் உலக கோப்பை தொடங்கப்பட்ட 2007 ஆம் ஆண்டு முதன்முறையாக கோப்பையை வென்றது.
அதன்பிறகு கோப்பையை வெல்லவில்லை. இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உத்வேகத்துடன் இருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான சோயிப் அக்தர்,
அக்தர் கருத்து
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது அரையிறுதிப் போட்டி குறித்து கருத்து தெரிவிக்கும்போது, இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வியடையும்.
இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும், இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் தான் இறுதிப் போட்டியில் மோதும் என கருத்து தெரிவித்துள்ளார்.