விராட் கோலி ஓய்வு பெற வேண்டும்... - அக்தர் அட்வைஸ்...! - ஷாக்கான ரசிகர்கள்
விராட் கோலி ஓய்வு பெற வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது.
ஆட்டமிழக்காமல் விராட் கோலி நின்று விளையாடி 82 ரன்களை குவித்தார். இது இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. தற்போது சமூகவலைத்தளங்களில் இந்திய அணி வீரர்களை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
அக்தர் அட்வைஸ்
இந்நிலையில், விராட் கோலி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெற வேண்டும். அவரது ஒட்டுமொத்த வலிமையை டி20 போட்டிகளில் செலுத்த வேண்டாம் என நான் நினைக்கிறேன். பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் விளையாடிய ஆற்றலை பயன்படுத்தி 3 ஒருநாள் சதம் அடித்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.