இங்கிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இந்தியா அணி அறிவிப்பு

cricket fans ground
By Jon Feb 26, 2021 03:58 AM GMT
Report

இங்கிலாந்து அணிக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் திவேதியா ஆகியோர் முதல் முறையாக இடம்பெற்றுள்ளனர்.

தமிழக வீரர்கள் நடராஜன், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடர், மார்ச் 12-ஆம் தேதி தொடங்குகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இருபது ஓவர் போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானத்திலேயே நடைபெற உள்ளது.