தட்கல் டிக்கெட் புக் செய்வதில் இனி புதிய மாற்றம் - ரயில்வே அமைச்சர் அறிவிப்பு
தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தட்கல் டிக்கெட்
கடைசி நேரங்களில் ரயில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு தட்கல் டிக்கெட் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தட்கல் டிக்கெட் புக் செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்டது.
எனவே இதனை தடுக்கும் வகையில், இரண்டரை கோடி போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் 6800 போலி இணையதளங்கள் குறித்து தேசிய சைபர் குற்றப்பிரிவில் ஐஆர்சிடிசி புகார் அளித்துள்ளது.
மின்னணு ஆதார்
இந்நிலையில், தக்கல் டிக்கட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.