இனி ரயில் டிக்கெட் புக் செய்ய டென்ஷன் ஆக வேண்டாம் - AI வசதி அறிமுகம்
டிக்கெட் முன்பதிவு செய்ய AI வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
டிக்கெட் முன்பதிவு
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்தல் போன்ற பணிகளை எளிதாக்க, 'AskDISHA 2.0' என்ற AI வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
IRCTC இணையதளம் அல்லது மொபைல் செயலியைத் திறந்தவுடன் இந்த புதிய சாட்பாட்டைப் பயன்படுத்தலாம். குரல் அடிப்படையிலான கட்டளைகள் மூலம் தகவல்களை வழங்குவது இதன் சிறப்பாக கருதப்படுகிறது.
AI வசதி
ஆங்கிலம், இந்தி, குஜராத்தி மொழிகளில் மட்டுமே செயல்படுகிறது. எதிர்காலத்தில் மேலும் பல மொழிகள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இதன்மூலம் டிக்கெட் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது பணம் செலுத்துதல் தோல்வியடைந்தாலோ, பணத்தைத் திரும்பப் பெறுவதன் நிலையை எளிதாக சரிபார்க்கலாம்.
டிக்கெட் முன்பதிவு மட்டுமல்ல, PNR நிலை, முன்பதிவு ஹிஸ்டிரி, டிக்கெட் ரத்து செய்தல் போன்ற பல சேவைகளும் இதில் கிடைக்கின்றன. பயணிகள் ரயில்வே சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் பெற இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.