மின் கட்டண உயர்வு - அதிமுக ஆர்ப்பாட்டம்!
மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மின் கட்டண உயர்வு
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவு அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. தமிழக அரசின் மின் கட்டண உயர்வுக்கு பிரதான எதிர்க்கட்சிகளும் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அதிமுக ஆர்ப்பாட்டம்
கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையை பொறுத்தவரை அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 9 மாவட்ட கழகங்களும் ஒன்றிணைந்து ஒரே கண்டன ஆர்ப்பாட்டமாக 27ம் தேதி காலை 10மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.