தம்பியோடு தகராறு.. நொடியில் நேர்ந்த சம்பவம் - பயத்தில் அண்ணன் எடுத்த விபரீத முடிவு!
சகோதரர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் தம்பியை கத்தியால் குத்திவிட்டு அண்ணன் தற்கொலை செய்து கொண்டார்.
தகராறு..
சேலம் மாவட்டம், தலைவாசல் மும்முடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (50). இவரது மூத்த மகன் கிருபாநாத் (18), தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இளைய மகன் ரவிபிரசாந்த் (17) அதே பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்து வந்துள்ளது. அப்படி நேற்று தம்பி ரவி பிரசாந்த் அண்ணன் கிருபாநாத்திடம் தகராறு செய்துள்ளார். அதில், ஆத்திரமடைந்த அண்ணன் கிருபாநாத் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தம்பி ரவிபிரசாந்த்தின் தொண்டையில் குத்தியுள்ளார்.
விபரீத முடிவு
அப்போது ரவிபிரசாந்த் கீழே விழுந்ததை பார்த்து பதறிப்போன கிருபாநாத், வீட்டினுள் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்த அப்பகுதியினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கிருபாநாத், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த நிலையில்,
படுகாயமடைந்த ரவிபிரசாந்த்துக்கு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, தலைவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.