முதல்வரின் சமூகநீதி பேச்செல்லாம் மேடையில் மட்டும் தான் - ஈபிஎஸ் கடும் சாடல்!

M K Stalin Tamil nadu Edappadi K. Palaniswami Tirunelveli
By Swetha Jul 02, 2024 09:34 AM GMT
Report

அரசு பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான மோதல்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

மேடையில் மட்டும் தான்..

நெல்லை மாவட்டம் மருதகுளம் பகுதியின் அரசு பள்ளியில் மாணவர்களிடம் சாதி ரீதியிலான பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 2 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல்வரின் சமூகநீதி பேச்செல்லாம் மேடையில் மட்டும் தான் - ஈபிஎஸ் கடும் சாடல்! | Edappadi Slams Mk Stalin

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்க வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொடூரமாக தாக்கப்பட்ட மாணவர்கள் - மீண்டும் சாதிய வன்முறை? நெல்லையில் பரபரப்பு!!

கொடூரமாக தாக்கப்பட்ட மாணவர்கள் - மீண்டும் சாதிய வன்முறை? நெல்லையில் பரபரப்பு!!

ஈபிஎஸ் சாடல்

"திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான பிரச்சனையால் நேற்று ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன்.சமூகநீதி என்று மேடையில் மட்டும் பேசும் திரு. @mkstalin தலைமையிலான

முதல்வரின் சமூகநீதி பேச்செல்லாம் மேடையில் மட்டும் தான் - ஈபிஎஸ் கடும் சாடல்! | Edappadi Slams Mk Stalin

விடியா திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ள நிலையில், பள்ளிகளிலேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்வது கவலையளிக்கிறது. சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை.

எனவே, வெற்று விளம்பர வார்த்தைகளை மட்டும் கூறுவதை விடுத்து, பள்ளிக்கூடங்களில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.