தமிழக எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் - ஈபிஎஸ் வலியுறுத்தல்!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami
By Jiyath Jul 10, 2024 01:56 PM GMT
Report

தமிழக எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது.

தமிழக எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் - ஈபிஎஸ் வலியுறுத்தல்! | Edappadi Palaniswami Insists To Tn Govt

நான் ஏற்கனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று விடியா திமுக முதல்வர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது.

அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை திமுக அரசு சீரழித்து வருகிறது - ராமதாஸ் குற்றச்சாட்டு!

அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை திமுக அரசு சீரழித்து வருகிறது - ராமதாஸ் குற்றச்சாட்டு!

வலியுறுத்தல் 

அடிப்படை நிர்வாகச் சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும்,

தமிழக எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் - ஈபிஎஸ் வலியுறுத்தல்! | Edappadi Palaniswami Insists To Tn Govt

அண்டை மாநில சாராயங்கள் புழங்குவதை தடுப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து, எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்தவும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.