அதிமுக - பாஜக முறிவு.. புதிய கூட்டணி இப்படிதான் இருக்கவேண்டும் - தீவிர ஆலோசனையில் எடப்பாடி பழனிச்சாமி!
எடப்பாடி பழனிச்சாமி புதிய கூட்டணி குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
கண்டனம்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை முதலில் விமர்சித்தார். அப்போது அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டிய எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்தார்.
அதன்பிறகு சமீபத்தில் அண்ணாமலை அறிஞர் அண்ணா குறித்து தவறான செய்தியை கூறினார். இதனால் அதிமுக-வினர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார், அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து உறுதியாக கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமி
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தையும் கூட்டியுள்ளார். பாஜகவுடனான கூட்டணி இல்லை என்கிற முடிவில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமையிலான புதிய கூட்டணி குறித்த விவாதங்களையும் நடத்த தொடங்கிவிட்டார்.
மேலும், புதிய கூட்டணிக்கு எப்படி பெயர் இருக்க வேண்டும், பாஜகவுடன் தொடர்பே இல்லாத போது, அவர்களுக்கு எதிராக மதச்சார்பின்மை போன்ற வார்த்தைகள் இடம் பெற வேண்டும் என்று ஆலோசனை நடத்தி வருகிரார்.
மேலும் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமையும் போது எந்தெந்த கட்சிகள் இணைய வாய்ப்பிருக்கிறது, திமுக கூட்டணியில் இருந்து எத்தனை கட்சிகள் வரும் என்பது குறித்து தீவிர ஆலோசனை நடித்தி வருவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர்.