அரசு மருத்துவமனையில் ரவுடுகள் அட்டூழியம்; கும்பகர்ண தூக்கத்தில் திமுக - கொதித்த எடப்பாடி!

Tamil nadu DMK Chennai Edappadi K. Palaniswami
By Swetha Jun 10, 2024 06:04 AM GMT
Report

அரசு மருத்துவமனையில் ரவுடி கும்பல் செய்த அட்டகாசம் குறித்து எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

ரவுடுகள் அட்டூழியம் 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில், உபகரணங்களை ஒரு கும்பல் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் ரவுடுகள் அட்டூழியம்; கும்பகர்ண தூக்கத்தில் திமுக - கொதித்த எடப்பாடி! | Edappadi Palaniswami Condemned Dmk

போதை மாத்திரைகள் விற்பனை தொடா்பாக சைக்கோ சரண், மந்தைவெளியைச் சோ்ந்த போண்டா ராஜேஷ், தினேஷ் ஆகிய 3 ரெளடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர்.

பந்தயத்தில் கட்சிக்காக காலை வெட்டிய தொண்டர் - சசிகலா, எடப்பாடி பழனிசாமி செய்த செயல்

பந்தயத்தில் கட்சிக்காக காலை வெட்டிய தொண்டர் - சசிகலா, எடப்பாடி பழனிசாமி செய்த செயல்

தூக்கத்தில் திமுக 

இந்த தகவலறிந்து வந்த சில ரவுடிகளின் ஆதரவு கும்பல் திடீரென மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவ உபகரணங்கள், கதவு மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர். மேலும், கைது செய்யப்பட்ட 3 பேரையும் விடுவிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம் எனக் கூறி,

அரசு மருத்துவமனையில் ரவுடுகள் அட்டூழியம்; கும்பகர்ண தூக்கத்தில் திமுக - கொதித்த எடப்பாடி! | Edappadi Palaniswami Condemned Dmk

பிளேடுகளால் உடல்களை அறுத்து மிரட்டல் விடுத்தனர். இதை கண்டு அங்கிருந்த மக்கள் அலறி ஓடினர். அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய பின்னர் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா மற்றும் கொலை வழக்கில் கைது செய்ததற்கு எதிர்ப்பாக ரவுடி கும்பல் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண்ணாடிகளை சேதப்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.

கொதித்த எடப்பாடி

போதைப்பொருள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடே அடையாள அட்டையாக திகழும் இந்த விடியா திமுக ஆட்சியில், பொதுமக்கள் மருத்துவ உதவி பெற வரும் அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது. இந்த விடியா திமுக அரசின் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு குறித்து

அரசு மருத்துவமனையில் ரவுடுகள் அட்டூழியம்; கும்பகர்ண தூக்கத்தில் திமுக - கொதித்த எடப்பாடி! | Edappadi Palaniswami Condemned Dmk

பல்வேறு முறை சுட்டிக்காட்டி வந்தும், அதனை சீர்செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கேளாதார் காதில் சங்கு ஊதிய கதையாக கும்பகர்ண தூக்கத்தில் உள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சேதமடைந்த மருத்துவ உபகரணங்களை உடனடியாக சீர்செய்வதுடன்,

தாக்குதல் நடத்திய ரவுடி கும்பல் மீது தக்க சட்ட நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டு, இனியாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்