முருகன் மாநாடு; கையில் வேலுடன் எடப்பாடி பழனிசாமி - குஷியில் அதிமுக

BJP Edappadi K. Palaniswami Salem
By Sumathi Jun 22, 2025 12:41 PM GMT
Report

எடப்பாடி பழனிசாமி கையில் வேல் கொடுத்து வரவேற்கப்பட்டுள்ளார்.

வேலுடன் இபிஎஸ்

மதுரையில் பாஜக சார்பாக முருகன் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

edappadi palanisamy

மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மட்டுமே பங்கேற்றிருந்தார். மேலும் மதுரை மாவட்ட நிர்வாகிகளான செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

'தமிழிலும்' குடமுழுக்கு நடத்தப்படும்; அதென்ன பிச்சையா? சீமான் காட்டம்

'தமிழிலும்' குடமுழுக்கு நடத்தப்படும்; அதென்ன பிச்சையா? சீமான் காட்டம்

 முருகன் மாநாடு 

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 400க்கும் அதிகமான நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து கொண்டனர். இவர்களுக்கு அதிமுகவின் சால்வை அணிவித்து எடப்பாடி பழனிசாமி வரவேற்பு அளித்தார்.

murugan maanadu madurai

பின் கட்சியில் இணைந்தவர்கள் தரப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு வேல் நினைவு பரிசாக அளிக்கப்பட்டது. அப்போது வேலினை பெற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, முருகன் மாநாடு அன்று வேல் கைகளுக்கு வந்துவிட்டது என்று தெரிவித்தார்.