எடப்பாடி ஆதரவாளரா? கேட்டுதான் அடிச்சாங்க - ரத்த காயத்துடன் அதிமுக நிர்வாகி!

Tamil nadu AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Sumathi Jun 18, 2022 08:09 AM GMT
Report

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த நிர்வாகியை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரா என்று ரத்தக்காயம் ஏற்படும் அளவிற்கு தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 தீவிர ஆலோசனை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

எடப்பாடி ஆதரவாளரா? கேட்டுதான் அடிச்சாங்க - ரத்த காயத்துடன் அதிமுக நிர்வாகி! | Edappadi Palanisamy Supporters Attack By Admk

ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தற்போது பங்கேற்று ஆலோசனை நடத்தி வருகிறார்.அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தொண்டர்களிடையே நடந்த மோதலில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

கடுமையான தாக்குதல்

இந்த கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க. நிர்வாகி ஒருவரை கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். ரத்தக்காயங்களுடன் வெளியே வந்த அவர் தன்னை தாக்கியவர்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரா? என்று கேட்டு தாக்கியதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எடப்பாடி ஆதரவாளரா? கேட்டுதான் அடிச்சாங்க - ரத்த காயத்துடன் அதிமுக நிர்வாகி! | Edappadi Palanisamy Supporters Attack By Admk

தாக்குதலுக்கு ஆளாகியவர் ஜெயக்குமாரின் ஆதரவாளர் என்றும், அவர் பெரம்பூர் முன்னாள் பகுதி செயலாளர் மாரிமுத்து என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

போராட்டத்தில் தடியடி - காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மருத்துவமனையில் திடீர் அனுமதி!