அதிமுக அலுவலக வன்முறை - ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு போலீசார் சம்மன்

Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Nandhini Jul 18, 2022 06:30 AM GMT
Report

ஓபிஎஸ் - இபிஎஸ்

ஓபிஎஸ் மட்டுமின்றி வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய ஒபிஎஸ், என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி, மற்றும் கே.பி.முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக மாறி மாறி அறிவித்துக்கொள்வது அதிமுக கட்சியினரிடையே குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதல்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டது. இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதால், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Edappadi Palanisamy-O. Panneerselvam

உயர் நீதிமன்றத்தில் மனு

இதனையடுத்து, அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆதரவாளர்களுக்கு போலீசார் சம்மன்

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கு சென்னை ராயப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர். அதில், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் நாளை ஆஜராக வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் நாளை மறுதினம் ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.