விடாமல் துரத்தும் அமலாக்கத்துறை..! டெல்லி CM அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4 முறை சம்மன்..!

Aam Aadmi Party India Arvind Kejriwal Enforcement Directorate
By Karthick Jan 13, 2024 09:00 AM GMT
Report

கலால் கொள்கை வழக்கில் நேரில் ஆஜராக மீண்டும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

வழக்கின் பின்னணி

மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக கடந்த 2021-22-ஆம் நிதி ஆண்டில் புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு அறிமுகப்படுத்தியது.

ed-summons-delhi-cm-arvind-kejriwal-again

இதில் பெருமளவில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டி டெல்லி மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

எல்லாம் போலி - எனக்கு எதிரா fake documents ED ரெடி பண்றாங்க - செந்தில் பாலாஜி மனு..!!

எல்லாம் போலி - எனக்கு எதிரா fake documents ED ரெடி பண்றாங்க - செந்தில் பாலாஜி மனு..!!

அதனை தொடர்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு ரத்து செய்தது உத்தரவிட்டது. தனித்தனியாக வழக்குகளை பதிவு செய்த சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன.

4-வது சம்மன்

இந்த விசாரணைக்கு ஆஜராகும் படி தான் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 4-வது முறையாக வரும் ஜனவரி 18-ஆம் தேதி சம்மன் அனுப்பியுள்ளது.

ed-summons-delhi-cm-arvind-kejriwal-again

கடைசியாக கடந்த ஜனவரி 3-ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பட்ட நிலையில், அவர் நேரில் ஆஜராகவில்லை.

ed-summons-delhi-cm-arvind-kejriwal-again

அதே நேரத்தில், ஆம் ஆத்மீ கட்சி தலைமை ஜனவரி 18 முதல் 20 வரை மக்களவை தொடர்பான கட்சிப் பணிகளுக்காக கெஜ்ரிவால் கோவா செல்வார் என்று அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.