இறுதி காலத்தை நெருங்கும் பூமி - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

World
By Sumathi Oct 03, 2024 06:43 AM GMT
Report

பூமி தனது இறுதி காலத்தை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூமியின் இறுதி காலம் 

பிரிஸ்டல் பல்கலைக்கழகம் (University of Bristol) விஞ்ஞானிகள், கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர். தொடர்ந்து அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

earth

அதன் அடிப்படையில், பூமியில் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் மறைந்துவிடும். அப்போது பூமியின் வெப்பம் 70 டிகிரி செல்சியஸை எட்டும். இப்படிப்பட்ட சூழலில் பூமியில் எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.

வெப்பம் மற்றும் வெப்பம் அதிகரிப்பால் அனைத்து உயிரினங்களும் இறக்க நேரிடும். பூமியில் கார்பனின் அளவு அதிகரிக்கும். அதன் காரணமாக பூமி அழிந்து போகலாம். 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு நிகழ்வின் பின்னர் டைனோசர்கள் அழிந்துவிட்டது.

பூமியின் மையத்தில் விரிசல்; வேகமான நகர்வு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பூமியின் மையத்தில் விரிசல்; வேகமான நகர்வு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

விஞ்ஞானிகள் எச்சரிக்கை 

கடந்த காலத்தில் உலகில் இருந்த கார்பன் டை ஆக்சைட்டின் அளவு, தற்போது இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. இதனால் உடல் உஷ்ணமடைந்து மக்கள் இறக்கின்றனர். பின்னர் பூமியின் அனைத்து கண்டங்களும் ஒன்றிணைந்து சூப்பர் கண்டம் பாங்கேயா அல்டிமாவை (Pangea Ultima) உருவாக்கும்.

இறுதி காலத்தை நெருங்கும் பூமி - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்! | Earth In Final Stage Scientists Shocking Info

Pangea Ultima என்பது ஒரு எதிர்கால சூப்பர் கண்டம். முதலில் பூமி வெப்பமடைந்து, பின்னர் தணிந்துவிடும். இறுதியில் பூமி வாழத் தகுதியற்றதாக மாறும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், பூமியின் பெரும்பகுதி எரிமலைகளால் மூடப்பட்டுள்ளது.

இந்த எரிமலைகள் அதிகளவு கரியமில வாயுவை (carbon dioxide) வெளியிடுகின்றன. இதனால் மக்கள் சுவாசிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அத்துடன் படிப்படியாக உயிரினமும் பூமியில் வாழ்வது கடினமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.