மார்க்சிஸ்ட் இளைஞரணி செயலாளர் கொலை... காதலன் வெறிச்செயல்!

Attempted Murder Kerala Crime Death
By Sumathi Aug 10, 2022 12:28 PM GMT
Report

கேரள மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி செயலாளர் சூரிய பிரியா கொலை செய்யப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்பட ஐந்து கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணி பிரிவு.

மார்க்சிஸ்ட் இளைஞரணி செயலாளர் கொலை... காதலன் வெறிச்செயல்! | Dyfi Woman Leader Strangled At Home In Kerala

அம்மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் கோதநல்லூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளராக செயல்பட்டு வந்தவர் சூரிய பிரியா (24). இவர் சித்திலஞ்சேரி பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கமிட்டி உறுப்பினராகவும் இருந்து வந்துள்ளார்.

கழுத்தை நெரித்து கொலை

சூரிய பிரியா சித்திலஞ்சேரி அருகே உள்ள கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். சூரிய பிரியாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுஜிஸ்(27) என்ற வாலிபருக்கும் காதல் இருந்து வந்துள்ளது.

மார்க்சிஸ்ட் இளைஞரணி செயலாளர் கொலை... காதலன் வெறிச்செயல்! | Dyfi Woman Leader Strangled At Home In Kerala

இந்நிலையில் திடீரென சூரிய பிரியா வீட்டிற்கு காதலன் சுதீஷ் அத்து மீறி நுழைந்திருக்கிறார். வீட்டில் தனியாக இருந்த சூரிய பிரியாவை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். இது குறித்து காவல் நிலையத்திற்கு சென்று சூரிய பிரியாவை கொலை செய்து விட்டேன் என்று சொல்லிவிட்டு சரணடைந்திருக்கிறார்.

 போலீஸில் சரண் 

உடனே போலீசார் சூரிய பிரியாவின் வீட்டிற்கு சென்று பார்த்திருக்கிறார்கள். அங்கே சூரிய பிரியா சடலமாக கிடந்திருக்கிறார். சூரிய பிரியாவின் கழுத்தை நெரித்து கஜீஸ் கொலை செய்வதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணி பிரிவான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளர் சூரிய பிரியா வீட்டில் கழுத்தை நெரித்து காதலனால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கோட்டையம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றன.