போலீசுக்கே இந்த நிலைமையா? பெண் போலீஸ் ரபியா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை
டெல்லியில் இளம் பெண் போலீஸ் ரபியா சைஃபி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் சங்க விஹாரில் வசிக்கும் 21 வயதான சபியா, படிப்பில் மிகவும் கெட்டிகாரராக இருந்து வந்துள்ளார்.தனது திறமையால் அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு போலீசாக பணியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி வழக்கம் போல் வீட்டில் இருந்து பணிக்கு சென்றுள்ளார்.ஆனால் இரவு 8 மணி ஆகியும் ரபியா சைஃபி வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவர் பணி செய்த அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது அவர் அங்கு இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரது தாய்.தந்தை மற்றும் சகோதரர்கள் பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளனர்.இந்நிலையில் ஃபரிதாபாத்தில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது .
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரபியா சைஃபின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவரின் மார்பக பகுதிகள் முழுவதும் சிதைக்கப்பட்டதாகவும்,விரல் மற்றும் உடல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட கத்திகுத்துக்குள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.இந்நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ரபியா சைஃபிக்கு நிதீ கிடைக்க வேண்டும்,குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்,வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி அவரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து #JusticeForRabiya என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.
Please guys use these tag for trend you can't feel the pain of a brother who's sister raped and murdered please use it ???#JusticeForRabiya #justiceforsabiya #JusticeForSabiyaSaifi pic.twitter.com/EJTllpPW1X
— King Khan (@ItsMeKingKhan) September 5, 2021