கலைஞருக்கு...அன்றைக்கே தவறு என்று எழுதினார்கள் - கச்சத்தீவு விவகாரம் - துரைமுருகன் பரபரப்பு கருத்து

Indian National Congress M Karunanidhi DMK Durai Murugan
By Karthick Apr 05, 2024 09:18 AM GMT
Report

 கச்சத்தீவு விவகாரம் தமிழக அரசியலின் முக்கிய பிரச்சார விவகாரமாகியுள்ளது.

கச்சத்தீவு விவகாரம்

தமிழ்நாட்டின் நில பரபரப்பான கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு கடந்த 1974-இல் கொடுத்ததை கடுமையாக நாட்டின் பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பேசியதை அடுத்து வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கரும் செய்தியாளர்களிடம் பேசினார்.

duraimurugan-comments-on-katchatheevu-kalaignar

அதனை தொடர்ந்து இந்த விவகாரம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழக அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மாறி, மாறி கட்சி தலைவர்கள் பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இவை அனைத்தும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரானதாகவே உள்ளது.

கச்சத்தீவு விவகாரம் - என்ன 20 ஆயிரம் புக் படிச்சாரோ...அண்ணாமலை LKG student - ஜெயக்குமார்

கச்சத்தீவு விவகாரம் - என்ன 20 ஆயிரம் புக் படிச்சாரோ...அண்ணாமலை LKG student - ஜெயக்குமார்

கலைஞருக்கு தெரியாமல்....

குறிப்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இந்த சூழலில் தான் திமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வள துறை அமைச்சரான துரைமுருகனிடம் இன்று இது குறித்து வினவப்பட்டுள்ளது.

duraimurugan-comments-on-katchatheevu-kalaignar

அதற்கு பதிலளித்த அவர், இது தொடர்பாக கலைஞரும் தானும் சட்டமன்றத்திலேயே பேசியிருப்பதாக குறிப்பிட்டு, அன்றைக்கே தனியார் நாளிதழில் தலையங்கத்தில் எழுதினார்கள் கலைஞருக்கு தெரியாமல் கட்சத்தீவை கொடுத்தது தவறு என்பதை குறிப்பிட்டார்.