துரை தயாநிதி உடல் நலம் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் - மருத்துவமனை முக்கிய அறிக்கை!

M K Stalin Vellore
By Sumathi Jul 08, 2024 04:16 AM GMT
Report

துரை தயாநிதியின் உடல்நலம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

துரை தயாநிதி

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மதுரையில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சரானார்.

durai dayanidhi

2014ஆம் ஆண்டு திமுக தலைமை இடையே ஏற்பட்ட மோதலில் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இவரது மகன் துரை தயாநிதி. சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் வசித்துவந்த இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி திடீரென மயக்கம் ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

துரை தயாநிதி திடீரென மருத்துவமனையில் அனுமதி; ஓடோடி சென்ற ஸ்டாலின் - என்னாச்சு?

துரை தயாநிதி திடீரென மருத்துவமனையில் அனுமதி; ஓடோடி சென்ற ஸ்டாலின் - என்னாச்சு?

மருத்துவமனை அறிக்கை

அப்போது, அவருக்கு மூளையிலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. அதன்பின், ஆறு மணி நேரத்துக்கும் மேல் சிகிச்சை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் வந்து அண்ணன் அழகிரிக்கு ஆறுதல் கூறினார்.

துரை தயாநிதி உடல் நலம் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் - மருத்துவமனை முக்கிய அறிக்கை! | Durai Dayanidhi Is Gaining Health Cmc Vellore

அதன்பின் சென்னையில் 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்ததையடுத்து வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அவருடைய உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, துரை தயாநிதிக்கு சிகிச்சை நல்லபடியாக நடந்து வருகிறது. அவர் உடல் நல்ல நிலையில் இருக்கிறார். யாரும் அவருடைய உடல் நலம் குறித்து எந்தவித வதந்திகளையும் பரப்பவேண்டாம் என்று வேலூர் சிஎம்சி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.