ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன துரை தயாநிதி - கதறி அழுத திமுகவினர்!

M K Stalin DMK Vellore
By Vidhya Senthil Sep 24, 2024 07:13 AM GMT
Report

 சிகிச்சையிலிருந்த துரை தயாநிதியை சிஎம்சி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு முறை சந்தித்து நலம் விசாரித்தார்.

துரை தயாநிதி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகியின் மகன் துரை தயாநிதிக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

k-azhagiris son

அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் துரை தயாநிதிக்கு மூளையிலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதாகத் தெரிவித்தனர்.உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து சரி செய்தனர்.

துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பரபரப்பு !

துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் - வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பரபரப்பு !

தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காகக் கடந்த மார்ச் 14-ம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சையுடன், புணர்வாழ்வு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வந்தது.

 அறுவை சிகிச்சை

மேலும் தொடர் சிகிச்சையிலிருந்த துரை தயாநிதியை சிஎம்சி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு முறை சந்தித்து நலம் விசாரித்தார். அங்கு அவருக்குச் சிகிச்சையுடன், புணர்வாழ்வு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

dmk

தொடர் சிகிச்சையிலிருந்த துரை தயாநிதியை சிஎம்சி மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு முறை சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த மாதம் 26-ம் தேதி திமுக துணைத்தலைவரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, துரை தயாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இதனையடுத்து இன்று (செப்.24) துரை தயாநிதி வேலூர் சிஎம்சியில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.அப்போது வெளியே வரும் போது உடல் மெலிந்து காணப்பட்டார். இதனைக் கண்ட திமுக நிர்வாகிகள் கண்கலங்கினர்.