விமானப் பணிப்பெண்ணை கடித்த பயணி - விமானி எடுத்த அந்த முடிவு!
பயணி ஒருவர் தகராறில் விமான பணிப்பெண்ணை கடித்துள்ளார்.
போதையில் தகராறு
ஜப்பானின் டோக்கியோ நகரில் இருந்து அமெரிக்காவின் சியாட்டில் நோக்கி, ஆல் நிப்பான் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 159 பயணிகள் பயணம் செய்தனர்.
இதில் 55 வயது பயணி ஒருவர் பயங்கர குடிப்போதையில் திடீரென எழுந்து விமான பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், பணியாளரின் கையை கடித்துள்ளார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பரபரப்பு
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பை முன்னிட்டு அந்த விமானம், ஜப்பானின் டோக்கியோ நகருக்கு திருப்பி விடப்பட்டது. அதனையடுத்து அந்த நபரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், நடந்த சம்பவம் எதுவும் தனக்கு நினைவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், விமானத்தில் சிறிது நேரம் பயணிகள் இடையே பரபரப்பு காணப்பட்டது.