பனியன், லுங்கியோடு பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர்; அத்துமீறல் - அதிர்ச்சி சம்பவம்!

Bihar
By Sumathi Jul 13, 2023 11:00 AM GMT
Report

பள்ளி தலைமை ஆசிரியர் மதுபோதையில் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை ஆசிரியர்

பீகார், பஹர்பூரில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் தலைமை ஆசிரியராக இருப்பவர் உமேஷ் தாகூர். இவர் பள்ளிக்கு லுங்கி பனியனுடன் வருகை தந்துள்ளார்.

பனியன், லுங்கியோடு பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர்; அத்துமீறல் - அதிர்ச்சி சம்பவம்! | Drunken Headmaster Misbehaves Bihar

இதனை பார்த்த ஆசிரியர்களும் மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், தீவிர மதுபோதையில் இருந்த ஆசிரியர் உமேஷ் வகுப்பறைக்குள் பாட்டுப்பாடியும், நடனமாடியும் ரகளை செய்துள்ளார்.

அத்துமீறல் 

தொடர்ந்து, பெண் ஆசிரியைகளிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். அதைனயடுத்து அங்குள்ள ஆசிரியர்கள் போலீஸாரிடம் புகாரளித்துள்ளனர்.

பனியன், லுங்கியோடு பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர்; அத்துமீறல் - அதிர்ச்சி சம்பவம்! | Drunken Headmaster Misbehaves Bihar

சம்பவம் அறிந்து விரைந்த போலீஸார் தலைமை ஆசிரியரை கைது செய்தனர்.