அரைகுறை ஆடையோடு பாட்டியை கொடூரமாக கொன்று உடல் மீது அமர்ந்து மந்திரம் படித்த மாணவர்
பப்ஜி விளையாடி மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் அவரது பாட்டியையே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் ஹரிஹரன் (21). இவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி. அக்ரி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான ஹரிஹரன் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் ஹரிஹரனின் நடவடிக்கைகளில் மாற்றத்தை கண்ட பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பின்னர் சிகிச்சை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய ஹரிஹரன் சில நாட்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை அருகே எல்லை கிராமத்தில் வசிக்கும் தனது பெரியப்பா மற்றும் பாட்டி வீட்டுக்கு சென்றிருக்கிறார். ஆனால் அங்கு சென்ற ஹரிஹரன் மீ்ண்டும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சுயநினைவை இழந்திருக்கிறார்.
நள்ளிரவில் அனைவரும் உறங்கச் சென்ற பிறகு பெரியப்பா வீட்டில் இருந்து பாட்டி வீட்டிற்குச் சென்ற ஹரிஹரன் பப்ஜி விளையாட்டில் வருவது போல அரைகுறை ஆடையுடன் எல்லை கிராமத்தின் வீதிகளில் ஓடி இருக்கிறார். இதைப்பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு வீட்டிற்குள் ஓடியுள்ளனர். இந்நிலையில் வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த தனது பாட்டி மாரியம்மாளை (85) ஹரிஹரன் கட்டை மற்றும் கற்களை கொண்டு ஆவேசமாக தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரது பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் அவரது உடலை தூக்கி வந்து சாலையில் வைத்து அதன் மீது அமர்ந்தபடி சில மந்திரங்களை படித்துள்ளார் ஹரிஹரன். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த எல்லை கிராம மக்கள் ஹரிஹரனை சுற்றிவளைத்து தாக்கியுள்ளனர். பின்னர் அவரை எலவனாசூர் கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.
கொலைசெய்யப்பட்டு கிடந்த மாரியம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.