போதைப்பொருள்; விளம்பரத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல்..அதை செய்ய வேண்டும் - ஈபிஎஸ்!

M K Stalin Tamil nadu DMK Edappadi K. Palaniswami
By Swetha Sep 02, 2024 01:00 PM GMT
Report

போதைப்பொருள் ஒழிப்பில் கவனம் செலுத்த வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈபிஎஸ்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, தி.மு.க. அரசின் விளம்பரங்களுக்கு அப்பால் செய்திகளைப் பார்த்தால்,

போதைப்பொருள்; விளம்பரத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல்..அதை செய்ய வேண்டும் - ஈபிஎஸ்! | Dont Focus Only On Advertising Eps Slams Dmk Govt

வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் போதைப்பொருள் புழக்கமுமே அரசின் உண்மை அடையாளங்களாக நாளிதழ்களை அலங்கரிக்கின்றன.வாரக் கொலைப் பட்டியல்கள் தொடர்கின்றன. போதைப்பொருள் புழக்கமும் கடுகளவு குறைந்த பாடில்லை.

எதுவுமே தெரியாமல் இருக்க நான் என்ன ஸ்டாலினா - ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமான ஈபிஎஸ்!

எதுவுமே தெரியாமல் இருக்க நான் என்ன ஸ்டாலினா - ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமான ஈபிஎஸ்!

போதைப்பொருள்

தி.மு.க. ஆட்சியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது என்றாலும் மிகையாகாது.இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இடையே இந்த போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்குவதை சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன.

போதைப்பொருள்; விளம்பரத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல்..அதை செய்ய வேண்டும் - ஈபிஎஸ்! | Dont Focus Only On Advertising Eps Slams Dmk Govt

இது மிகுந்த கவலையளிக்கிறது. வெளிநாட்டு போட்டோஷூட்டிலும், ஆடம்பரப் பகட்டு கார் ரேஸிலும் மட்டுமே கவனம் செலுத்தி, அதன் வர்ணஜாலங்களுக்கு இடையே தமிழ்நாட்டின் உண்மை அவல நிலையை மறைக்க முயற்சிக்கும் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.

அடுத்து என்ன விளம்பரம் என்பதில் மட்டுமே இருக்கும் கவனத்தை, மாநிலத்தின் அடிப்படை பிரச்சனைகளான சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும், போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் கவனம் செலுத்துமாறு தி.மு.க. முதல்வரை வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.