10 வருடமா தன் உரிமையாளருக்காக காத்திருந்த நாய் - கண் கலங்கவைக்கும் பாச கதை!

Japan Tokyo
By Vinothini Jul 06, 2023 12:00 PM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 ஜப்பானில் தன் உரிமையாளர் இறந்தது தெரியாமல் காத்திருந்த நாயை கொண்டாடும் வகையில் சிலை அமைத்துள்ளனர்.

டோக்கியோ

ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவில் 1923-ம் ஆண்டு, ஹிடெசாபுரோ யுனோ என்ற பேராசிரியர் ஒருவர் டோக்கியோ பல்கலைக்கழத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் "அகிடா" என்ற வகை நாயை வளர்த்து வந்திருக்கிறார், அதற்கு ஹச்சிக்கோ துன்று பெயர் வைத்தார். பேராசிரியருடன் இந்த நாய் மிகவும் நெருக்கமாகிவிட்டது.

dog-waits-for-its-owner-for-10-years

இவர் பல்கலைக்கழகத்திற்கு செல்லும்போது ஷிபுயா ரயில் நிலையத்திற்கு இவருடன் சென்று வந்தது. பின்னர் அவரை வேலை முடிந்து வரும்பொழுது அவரை அழைத்து வருவதற்கு ரயில் நிலையத்திற்கு சென்று பாசத்துடன் காத்திருக்கும். இதேபோல் 2 ஆண்டுகளாக நடந்துள்ளது, வழக்கம்போல் இந்த நாய் அவரை அழைத்து வர ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளது.

சிலை

இந்நிலையில், பேராசிரியர் திரும்பி வரவில்லை, இவர் பல்கலைக்கழகத்தில் இருக்கும்பொழுது திடீரென மூலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்துவிட்டார். இதனை அறியாத ஹச்சிகோ தினமும் அவரை தேடி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளது. அங்கு உள்ள ஊழியர்கள் துரத்த முயற்சித்தாலும் தினமும் உரிமையாளரை தேடி சென்றுள்ளது. இந்த பாசம் குறித்து அறிந்த டோக்கியோ அசாஹி ஷிம்பன் என்ற நாளிதழ் 1932 அக்டோபரில் இந்த கதை குறித்து எழுதியதில் புகழ்பெற்றது.

dog-waits-for-its-owner-for-10-years

பலரும் இதனை தத்தெடுக்க முயன்றனர், ஆனால் யாரிடமும் செல்லவில்லை, தன் உரிமையாளரின் முன்னாள் தோட்டக்காரரிடம் சென்றுவிட்டது. மேலும், 1925 முதல் 1935 வரை ஒவ்வொரு நாளும் ஷிபுயா ரயில் நிலையத்திற்கு வந்து தனது உரிமையாளருக்காக காத்திருந்த நன்றியுள்ள இந்த நாயை அந்நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து, ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஷிபுயா ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த நாயின் உருவச்சிலையை வெண்கலத்தில் செதுக்கி சிறப்பும் செய்துள்ளனர்.