நள்ளிரவில் நாய் குரைத்ததால்.. 67 பேர் உயிர் தப்பிய அதிசயம் - என்ன நடந்தது?

Himachal Pradesh Weather Rain
By Sumathi Jul 09, 2025 07:17 AM GMT
Report

நாய் குரைத்ததால் 67 பேர் உயிர் தப்பிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

நிலச்சரிவு பாதிப்பு

இமாசல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் தரம்பூர் பகுதியில் சியாதி என்ற கிராமம் தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஜூன் மாதம் இறுதியில் இருந்து கடந்த 6-ந் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது.

நள்ளிரவில் நாய் குரைத்ததால்.. 67 பேர் உயிர் தப்பிய அதிசயம் - என்ன நடந்தது? | Dog S Bark Saves 67 Lives In Himachal Pradesh

இதனால் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், சியாதியில் ஏறக்குறைய 20 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு 67 பேர் வசித்து வந்த நிலையில், நாய் ஒன்று செய்த செயலால் உயிர் தப்பிய அதிசயம் நடந்துள்ளது.

வயலில் கிடைத்த வைரக்கல்; 2 கோடிக்கு விற்பனை - முண்டியத்து தேடும் மக்கள்

வயலில் கிடைத்த வைரக்கல்; 2 கோடிக்கு விற்பனை - முண்டியத்து தேடும் மக்கள்

நாய் எச்சரிக்கை

நிலச்​சரிவுக்கு முன்பு நள்​ளிர​வில் அங்​கிருந்த ஒரு நாய் கடுமை​யாக குரைத்து சத்​தம் எழுப்​பி​யுள்​ளது. நாய் தொடர்ந்து குரைத்ததால் அந்த சத்​தத்தை கேட்டு கண்​விழித்த அதன் உரிமை​யாளர் நரேந்​திரா தனது வீட்​டின் சுவரில் விரிசல் விழுந்து தண்​ணீர் உள்ளே வரு​வதை பார்த்​துள்​ளார்.

himachal pradesh

உடனே அவர் கிராமத்​தினரை எழுப்பி எச்​சரிக்கை செய்​துள்​ளார். இதனால் அனை​வரும் அங்​கிருந்து பாது​காப்​பான இடத்துக்கு தப்​பிச் சென்​றுள்​ளனர். பின்​னர் சிறிது நேரத்​தில் அந்த கிராமத்​தில் ஏற்​பட்ட பயங்​கர​மான நிலச்​சரி​வில் பல வீடு​கள் தரைமட்​ட​மா​யின.

சரி​யான நேரத்​தில் நாய் குரைத்து எச்​சரிக்கை செய்​த​தால் 20 குடும்​பங்​களை சேர்ந்த 67 பேர் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பியுள்​ளனர்.