திரும்பி வருவார்.. 4 மாதம் பிணவறைக்கு முன்பே காத்திருக்கும் நாய் - நெகிழ்ச்சி!
ஓனர் வருவார் என்று பிணவறைக்கு முன் காத்திருக்கும் நாய் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிணவறை
கேரளா மாநிலம், கண்ணூரில் உள்ள அரசு மருத்துவமனையில், பிணவறைக்கு முன்பாக நாய் ஒன்று 4 மாதங்களாக காத்து கிடக்கின்றது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நோயாளி ஒருவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இந்த நோயாளியுடன், நாயும் பின்னால் வந்துள்ளது, பின்னர் அந்த நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். அதையடுத்து அவரை பிணவறைக்கு கொண்டு சென்றனர், அதனை பார்த்த அந்த நாய் அவர் உள்ளேதான் இருக்கிறார், திரும்பி வருவார் என்று நம்பி அங்கேயே காத்திருக்கிறது.
காத்துக்கிடந்த நாய்
இந்நிலையில், தனது முதலாளி பிணவறைக்கு உள்ளே தான் உள்ளார், அவர் திரும்பி வருவார் என்று காத்திருந்த அந்த நாயை கவனித்த ஒருவர் காத்திருப்பை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
#WATCH | Kerala: A faithful dog stationed himself near a hospital's mortuary door in Kannur. The dog's owner is believed to have died at the hospital and been taken to the mortuary. pic.twitter.com/Yt6Hs6NvJt
— ANI (@ANI) November 5, 2023
இதனைக் கண்ட நெட்டிசன்கள் நாயின் பாசத்தை குறித்து நெகிழ்ச்சியுடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.